தஞ்சை கள்ளர் உலகம்

கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள், முயன்றால் முடியாதவற்றிற்கும் முடிவுரைகளால் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரிதாய், அருமருந்தாய், என்றும் இளமை நல்கும் குணமுடைய ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட வம்சமிது.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கள்ளர்குல முன்னோர்கள் நமக்கொனச் சேகரித்து வைத்துச்சென்ற கலாச்சார பண்புகளை இக்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்.
கள்ளர்குல சந்ததியினர்களாக இந்நாளில் சாதிப்போம்.
நம் வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

நிமிர்ந்து நிற்க நமக்கேது தடை?
ஆநிறை கவர்ந்து அடிமை கொண்ட நாடுகள் எத்தனை?
காடழித்து களனி படைத்த களஞ்சியங்கள் எத்தனை?
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கும்போது அதில் நாம் சிற்பமா?
சிதறி விழும் கற்துண்டுகளா?
சிந்திப்போம் செயல்படுவோம்.

கள்ளர் வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை. அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை. வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் என பெருமை கொள்வோம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம்.

அகர எழுத்துக்களில் கள்ளர் பெருமை.
டங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
நிறை கவர்ந்தவரும் கள்ளரே.
ந்திரனும் கரிய கள்ளரவரே.
சனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
ழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ர் காத்தவரும் கள்ளரே.
ளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
னாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ங்காரம் பாடியவரும் கள்ளரே.
வைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்.
என்றும் அன்புடன்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
லண்டன்.
இங்கிலாந்து.


இனையதள முகவரிகள்.
1. www.kallarperavai.weebly.com
2. www.kallarperavai.webs.com
3. www.kallarperavai.hpage.com
4. www.kallarperavai.blogspot.com
5. www. thanjaikallarulagam.blogspot.com

மின்னஞ்ஞல் முகவரி.
kallarperavai@yahoo.co.uk

Thursday, November 25, 2010

உயர்திரு விருத்தாசலம் நாட்டார் ஐயா இறைவனடி சேர்ந்தார்












கள்ளர் குல மா மனிதர் பாசமிகு உயர்திரு விருத்தாசலம் நாட்டார் ஐயா இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி திரு பழனிவேல் சோழகர் மூலமாக 24/11/2010 அன்று சர்வதேச கள்ளர் பேரவைக்கு கிடைத்தது. சர்வதேச கள்ளர் பேரவையின் சிறப்பு அங்கத்தினராக இருந்து பல்வேறு வழிகளிலும் எமக்கு உதவிகளும், ஆலோனைகளும் வழங்கி வந்த ஒரு மாபெரும் மேதை இன்று நம்முடன் இல்லை என்று உணரும் போது இதயம் வலிக்கிறது. ஐயாவின் மறைவினால் துயரும் குடும்பத்தினருக்கு சர்வதேச கள்ளர் பேரவை உருப்பினர்கள் சார்பாக எமது இரங்களை தெரிவிதுக்கொள்கிறோம்.

வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த விருத்தாசலம் நாட்டார் ஐயா இன்று நம்மமுடன் இல்லை. பொன் மன உடல் பூமிதனில் சாய்ந்து விட்டது. பெரும்புலவனாய், புரவலனாய், பேராசிரியருமாய்த் திகழ்ந்த மாமனிதர் குவித்திட்ட சாதனைகள் அளவிடமுடியாதவை. நெஞ்சார நினைத்து அவரது திருவடிக்குத் தலைசாய்த்து வணங்குவோம்.

நாமெல்லோருமே வாழப்பிறந்தவர்கள், வாழத்துடிக்கிறோம், நம் இதயங்கள் நமக்காக துடிக்கின்றன. பல்லாயிரத்திலொருவர் இதயம் மட்டுமே பிறர் வாழத் துடிக்கிறது. அத்துடிபினை நாம் விருத்தாசலம் நாட்டார் ஐயாவிடம் கண்டோம்.நாம் இன்ப துன்பங்களையும்,ஏற்ற இறக்கங்களையும், கவலை குலப்பங்களையும் அனுபவித்து வாழ்ந்தாலும்,விருத்தாசலம் நாட்டார் ஐயா பிறர்க்கென வாழ்ந்த சான்றோன். தான் தோன்றிய குலத்திற்கும்,தமிழ் மொழிக்கும்,கல்வி முதலிய சமுதாய வளர்ச்சிக்கும் உறுதுணையாக நின்று இளமை முதல் முதுமை வரை எத்தனையோ தடைகள்,இடையூறுகள், அழிபாடுகளையும் தாண்டி இயலாமைக்கு கைகொடுத்து தாங்கி பலரையும் கரை சேர்த்த மாமனித பெருமகனார் இறைவன் திருவடிகளில் இளைப்பார ஈரமுடன் ஈசனை வேண்டுவோம்.

விருத்தாசலம் நாட்டார் ஐயா மறைந்து விட்டாலும் அவரது தொண்டும், ஆற்றிய பணிகளும், ஈட்டிய புகழும் பல்லாயிரம் ஆண்டுகள் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும். சான்றோர்கள் புகழ் பரப்பி சான்றோனாய் மறைந்துவிட்ட மாமனிதர் ஐயா விருத்தாசலநாட்டார் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பார துதித்திடுவோம்.

என்றும் ஈரமுடன் நினைவில் கொள்ளும்
சர்வதேச கள்ளர் பேரவை
இங்கிலாந்து.

No comments: